For the 80th Birth day celebrations of the legend Lalgudi Sri G Jayaraman, I was fortunate to edit and direct "LALGUDI NECTAR DROPS" which is a string of unfurling from the disciples of this great guru. These views are very different from what we know of the legend as his disciples were so fortunate to be proximate to him, his day to day and his music. SIX such short capsules are uploaded here. These are Swathi Sanskriti Series Presentation.
Friday, May 24, 2013
Thursday, August 9, 2012
DIVINE PLEA FOR CONTRIBUTION
The divine dream of our father Brahmasri T S Balakrishna Sastrigal of resurrecting the
Unique Temple for Epilepsy and Nervous Cure is in the process of being fulfilled with the
blessings of Sri Badravalli samedha Sri Badrawalleeswarar at Thiruveezhimizhalai.
Kindly find attached here the lattest photos depicting the fact that Thiruppani work has
reached an advance stage.
Thavathiru Aadheenam of Thiruvavaduthurai has approved 30th November 2012 for
Maha Kumbabishekam.
The estimated budget for balance of work and Maha Mumbabishekam is Rs 10 Lakhs.
It is time all the noble minded Bhakthas to participate in the final stages of the
Thiruppani and the Maha Kumbabishekam.
Subha Dhinam.
TSBK Moulee / S B Khanthan / Sankari Ramanarayanan
Trustees, Sri Badravalleeswarar Kovil Kaingairya Trust
Smt Mahalakshmi Subramanian and Shri V.C.Subramanian
Mahalakshmi Charitable Trust
Saturday, February 18, 2012
STATUS OF DIVINE WORK
We feel glad to update you on the progress of Thirupani at Sri Badravalli samedha Sri Badravalleeswarar Kovil at Thiruveezhimizhalai, a Unique temple for Epilepsy and Nervous Cure.
Please find attached the recent photos of work in progress. With the first Rs 3 Lakhs of the total of Rs 20 Lakhs, needed for this divine project, contributed by Family and Friends:
1. New Ambal Sannadhi is raised up to Kopuram level
2. New Murugar Sannadhi is raised up to Kopuram Level
3. Reconstruction work on Vinayakar and Badravalleeswarar Sannadhi Kopurams are underway.
Yesterday, the second lot of Rs 3.00 Lakhs contributed by Family and Friends has been provided to the Stapathy. This will bring all the kopurams to shape.
Major work like construction of Mani Mantap, Resurrecting the NIVARANA SAROVAR (Vali Theertham), raising the temple compound wall, raising chandikeswarar sannadhi, providing bathing, changing and toilet facilities for devotees, raising the front arch, flooring etc are remaining.
As you all know, even a pie contributed to resurrecting a SHIVAALAYAM
provides benefits to generations in thousand folds.
We solicit your participation in this Divine Endeavor.
Subha Dhinam
TSBK Moulee / S B Khanthan / Sankari Ramanarayanan
Trustees, Sri Badravalleeswarar Kovil Kaingarya Trust.

Sunday, January 8, 2012
இந்த மாமனிதருடன் நானும் பழகி இருக்கிறேன், வேலை செய்திருக்கிறேன் என்று பெருமையுடன் நினைவு கூறுகிறேன்சுஜாதாவின் ஒரு கட்டுரை.மே மாதம் மூன்றாம் தேதி, எனக்கு எழுபது வயது நிறைகிறது. இதற்கான அடையாளங்கள் என்ன என்று யோசித்துப் பார்க்கிறேன். மெரீனாவில் நடக்கும்போது எதிர்ப்படுபவர்கள் பெரும் பாலும் என்னைவிட சின்ன வயசுக்காரர்களாகத் தெரிகிறார்கள். ஒரு தாத்தா மாட்டினார். நிச்சயம் என்னைவிட மூத்தவர். சிமென்ட் பெஞ்சில், என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார்."யு ஆர் எ ரைட்டர்! எனக்கு எத்தனை வயசு சொல்லுங்க, பார்க்கலாம்!" என்று கண் சிமிட்டலுடன் கேட்டார்.நான் யோசித்து, ‘‘கட்டை விரலால் மூக்கைத் தொடுங்கோ" என்றேன்."எதுக்குப்பா?""தொடுங்களேன்!" சற்று வியப்புடன் தொட்டார்."மத்த விரல்களை றெக்கை மாதிரி அசை யுங்கோ!" என்றேன். ‘‘இதிலிருந்து
கண்டுபிடிச்சுட முடியுமா, என்ன?’Õ என்று, விரல்களைச் சொன்னபடி அசைத் தார்."ரெண்டு கையையும் பரப்பி, ஏரோப்ளேன் மாதிரி வெச்சுண்டு ஒரே ஒரு தடவை லேசா குதிங்கோ. பாத்து... பாத்து...""இது என்னப்பா ட்ரிக்கு?" என்று அப்படியே செய்தார்."உங்களுக்கு இந்த மே பன்னண்டு வந்தா எண்பத்தோரு வயசு!" என்றேன்.அசந்து போய், "கை குடு. எப்படிப்பா இத்தனை கரெக்டா சொன்னே?""ஒரு ட்ரிக்கும் இல்லை, சார்! நேத்திக்குதான் இதே பெஞ்சில், இதே சமயம் வந்து
உட்கார்ந்து, உங்க வயசு, பர்த்டே எல்லாம் சொன் னீங்க. மறந்துட் டீங்க!"
என்றேன். தாத்தா மாதிரி அத்தனை மோசம் இல்லை என்றாலும், எனக்கும் சமீபத்திய ஞாபகங்கள் சற்றே பிசகுகின்றன. ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்குச் சென்றால், எதற்காக வந்தோம் என்பது மறந்தே போகிறது. பெயர்கள் ஞாபகம் இருப்பதில்லை. ஆந்தைக்கு இங்கிலீஷில் என்ன என்று சட்டென நினைவு வருவதில்லை. ‘படையப்பா’வில் ரஜினிக்கு முன்னால் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்தாரே... அந்த நடிகை யின் பெயர் என்ன என்று ஒரு நாள் அதிகாலை கண் விழித்ததும், ஒரு மணி நேரம் யோசித்தேன், கிட்டவில்லை.மனைவி எழக் காத்திருந்து அவளிடம் கேட்டேன். "ரம்யா கிருஷ்ணன்" என்றாள்.
இம்மாதிரி, நியூரான்கள் களைத்துப் போவது தெரிகிறது. ஆனால், நீண்ட நாள்
ஞாபகங்கள் பத்திரமாக இருக்கின்றன. அது மூளையில் வேறு பேட்டை போலும்!
கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன், சின்ன வயசில் கோயமுத்தூரில்
அம்மா\அப்பாவுடன் ஜட்கா வண்டியில் "ஜகதலப்ரதாபன்" சினிமா போனது, ஒண்ணாம் கிளாஸ் டீச்சருக்கு ஆனந்த விகடனும், அமிர்தாஞ்சனும் கொண்டு போய்க் கொடுத்தது, பள்ளி மணியை அகாலமாக அடித்தது, எனக்குத் தம்பி பிறந்தது... இதெல்லாம் தெளிவாக ஞாபகம் உள்ளது. ஸ்ரீரங்கத்துக் கதைகள் அனைத்தும் என் நீண்ட நாள் ஞாபகங்களின் வடிவம்தான்!டெல்லியில், பெட்ரோல் எழுபத்தைந்து பைசாவும், பால் ஐம்பத்தைந்து பைசாவும் கொடுத்து வாங்கி தாராளமாக வாழ்ந்தது, என் முதல் கதை, முதல் நாவல் பிரசுரமானது, எஸ்.ஏ.பி'யின் கடிதக் குறிப்பு எல்லாம் ஞாபகம் உள்ளது. ரம்யா கிருஷ்ணன் போன்ற மேட்டர்தான் சட்டென்று வழுக்கிவிடுகிறது.மெரீனாவில், ஷார்ட்ஸ் ஸ்னீக்கரில் ஓடும் இளைஞர்களைப் பார்த்து முன்பு
பொறாமைப்படுவேன். இப்போது புன்னகைக்கிறேன். பொதுவாகவே, பொறாமைப்படுவதற்கான விஷயங்களும், அதட்டிச் சொல்வதற்கான விஷயங்களும் குறைந்து வருகின்றன. ஹிந்துவின் "ஆபிச்சுவரி" பார்க்கையில், இறந்தவர் என்னைவிட சின்னவரா, பெரியவரா என்று முதலில் பார்ப்பேன். சின்னவராக இருந்தால், ‘பரவால்லை... நாம தப்பிச்சோம்!’
என்றும், பெரியவ ராக இருந்தால் கழித்துப் பார்த்து, ‘பரவால்லை... இன்னும் கொஞ்ச நாள் இருக்கு என்றும் எண்ணுவேன். எதிர்காலம் என்பதை இப்போதெல் லாம் வருஷக் கணக்கில் நினைத்துப் பார்ப்பது இல்லை. மாதக் கணக்கில்... ஏன், உடம்பு சரியில் லாமல் இருக்கும்போது வாரக் கணக்கில், நாள் கணக்கில் அந்தந்த நாளை வாழத் தோன்றுகிறது. Today I am alright, thank God!சயின்ஸ் அதிகம் படித்ததால், கடவுளைப் பற்றிய குழப்பங்கள் தீர்க்க முடியாமல்
இருக்கின்றன. யேட்ஸ் சொன்னதுபோல், "சிலர் கடவுள் இருக்கிறார் என்கிறார்கள். பிறர் கடவுள் இல்லை என்கிறார்கள். உண்மை ஒருக்கால் இரண்டுக்கும் இ டையில் எங்கோ இருக்கிறது!".ஆனால், டி.என்.ஏ. ரகசியத்தையும், உயிரின வேறுபாடுகளையும், அண்டசராசரங்களின் அளவையும் பார்க்கும்போது, நம்மை மீறிய சக்தி புலன் உணர்வுக்கும், நம் அற்ப வார்த்தைகளுக்கும் அகப்படாத ஒரு சக்தி இருப்பதில் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. நான் நாத்திகன் அல்ல. மிஞ்சிப்போனால், ரஸ்ஸல் படித்தபோது ‘அக்னாஸ்டிக்’காக அதாவது, கடவுள் இருப்பைப் பற்றித் தெரியாதவனாக இருந்திருக்கிறேன். மறுபிறவியில் எனக்கு நம்பிக்கை இல்லை. பிறந்தால் இதே ஞாபகங்கள், இதே முதுகுவலியுடன் தமிழ்நாட்டில் பிறக்க வேண்டும். தமிழில் மீண்டும் கதைகள் எழுத வேண்டும். நடக்கிற காரியமா? முற்றிலும் புதிய பிறப்பு, தேசம், பெயர், உடல் என்றால் அது மறுபிறவி அல்ல... வேறு பிறவி. மேலும், எங்கேயாவது ஸ்விஸ் நாட்டில் பிறந்து வைத்தால், பாஷை தெரியாமல் கஷ்டப்படுவேன்.இறந்ததும் என்ன ஆகிறது என்பதைப் பற்றி நசிகேதனைப்போல யோசிக்கும் போது, சட்டென்று ஒரு திடுக்கிடல் ஏற்படும். அந்தச் சமயத்தில் மல்லிகை வாசனையையோ, ஒரு குழந்தையின் புன்சிரிப்பையோ எண்ணிப் பார்த்துக் கவனத்தைக் கலைத்துக்கொள்வேன். சொர்க்கம், நரகம் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இரண்டும் இங்கே தான் என்று எண்ணுகிறேன். அப்படி ஒருக்கால் இருந்தால், நரகத்துக்குப் போகத்தான் விரும்புகிறேன். அங்கே தான் சுவாரஸ்யமான ஆசாமிகள் இருப்பார்கள். சொர்க்கத்தில், நித்ய அகண்ட பஜனைச் சத்தம் எனக்கு ஒரு நாளைக்கு மேல் தாங்காது.ஆரம்பத்தில் இளைஞனாக இருந்த போது, ஏரோப்ளேன் ஓட்டவும், கித்தார் வாசித்து உலகை வெல்லவும், நிலவை விலை பேசவும் ஆசைப்பட்டேன். நாளடைவில் இந்த இச்சைகள் படிப்படி யாகத் திருத்தப்பட்டு, எளிமைப்படுத்தப் பட்டு, எழுபது வயதில் காலை எழுந் தவுடன் சுகமாக பாத்ரூம் போனாலே சந்தோஷப்படுகிறேன். வாழ்க்கையே இவ்வகையில் progressive
compromises (படிப்படியான சமரசங்களால் ஆனது).இன்றைய தினத்தில், என் டாப்டென் கவலைகள் அல்லது தேவைகள் என்றால்...
முதலிடத்தில் உடல் நலம், மனநலம், மற்றவருக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருப்பது, தெரிந்தோ தெரியாமலோ யார் மனதையும் புண் படுத்தாமல் இருப்பது, இன்சொல், அனுதாபம், நல்ல காபி, நகைச்சுவை உணர்வு, நான்கு பக்கமாவது படிப்பது, எழுதுவது போன்றவை பட்டியலில் உள்ளன. பணம் அதில் இல்லை. முதலிலேயே அது லிஸ்ட்டை விட்டுப் போய்விட்டது.தி.ஜானகிராமனின் "கொட்டு மேளம்" கதையில் வரும் டாக்டருக்குப் போல, மனைவி அவ்வப்போது வர வேண்டிய பணத்தையும், ஏமாற்றிய ஜனங்களை யும் எனக்குச் சொல்லிக் காட்டுவாள். அவளும் இப்போது இதில் பயனில்லை என்று நிறுத்திவிட்டாள். பணம் பிரதானமாக இல்லாததால், இன்று எழுபது வயசில் மனச்சாட்சி உறுத்தாமல் வாழ முடிகிறது. ஜெயிலுக்குப் போன தில்லை. ஒரே ஒரு தடவை டில்லியிலும், ஒரு தடவை பெங்களூரிலும் ஒன்வேயில் ஸ்கூட்டர் ஓட்டியதால், மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுக்குப் போயிருக்கிறேன். வோட்டிங் மெஷினுக் காக சாட்சி சொல்ல, கேரளா ஹைகோர்ட் டில்
இருந்து சுப்ரீம் கோர்ட் வரை போயிருக்கிறேன்.அம்பலம் இணைய (www.ambalam.com) இதழில் ஒரு வாசகர் கேள்வி கேட்டிருந்தார்...
"நாற்பது வருஷ மாக உங்களைத் தொடர்ந்து படித்து வருகிறேனே... என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர் கள்?" என்று.நீண்ட யோசனைக்குப் பிறகு பதில் அளித்தேன்... "நாற்பது வருஷம் உங்களைத்
தொடர்ந்து படிக்க வைத்திருக்கிறேனே, என்னைப் பற்றி நீங்கள் என்ன
நினைக்கிறீர்களோ அதேதான்!" என்று. என் எழுத்து, என்னைப் பல தேசங்களுக்கு
அழைத்துச் சென்றிருக்கிறது. பல வகைப்பட்ட மனிதர்களைச் சந்திக்க
வைத்திருக்கிறது. பிரைவேட் ஜெட்டி லிருந்து ஃப்ரீமாண்ட் மிஷன் பீக் மலை யுச்சி மாளிகை வரை அனுமதித்திருக்கிறது. பெயர் தெரியாத வாசகர்கள் நள்ளிரவில் கூப்பிட்டுப் பாராட்டியிருக் கிறார்கள். மனைவிமார்கள் அழுதிருக்கிறார்கள். கணவன்கள், மனைவிகள் மேல் சந்தேகப்பட்டுத் தற்கொலை செய்து கொள்ளுமுன், கடைசி ஆறுதலுக்கு என்னை விளித்திருக்கிறார்கள். ‘ரோஜா’ வெளிவந்த சமயத்தில், பெங்களூருக் குத் தனியாக ஓடி வந்த இளம்பெண் அதிகாலை ஜலஹள்ளியில், ‘அரவிந்த
சாமியுடன் என்னை மண முடி!’ என்று கதவைத் தட்டி யிருக்கிறாள். "ஆ" கதையைப் படித்துவிட்டு, "என் மகளை மணம் செய்துகொள்ள வேண் டும்" என்று திருநெல்வேலில் இருந்து வந்த மனநிலை சரியில்லாத இளைஞரும், ‘பாலம்’ கதையைப் படித்து விட்டு என்னைக் கொல்ல வர தேதி கேட்டிருந்த கோவை வாசியும் என் வாசகர்கள்தான். வாழ்க்கையின் அத்தனை பிரச்னைகளுக்கும், முதுகுவலியில் இருந்து முண்டகோபனிஷத் வரை யோசனை சொல்லியிருக்கிறார்கள்; கேட்டிருக்கிறார்கள். மிகச் சிறந்த
நண்பர்களையும், அற்புதக் கணங்களையும் என் எழுத்தால் பெற்றிருக்கிறேன். அதுதான் என்னுடைய நோபெல்
--
Sunday, January 1, 2012
TSB's Wish Getting Fulfilled
WISHING YOU A HAPPY AND SUCCESSFUL 2012.
Brahmasri T S Balakrishna Sastrigal through out his life had one wish very close to his heart. That is to resurrect the unique temple of Sri Badravalleeswarar at Thiruveezhimazhalai near Kumbakonam. Despite his repeated attempts, the wish left unfulfilled during his life time for various reasons.
Now, we have taken up this mission as our life ambition as also a New Year Resolution - 2012. On this Happy Day 1 of 2012 we extend our hands towards you all to associate and participate in our endeavor to accomplish this goal together.
Several decades back, our Great Grand Father Brahmasri Venkata Subramaniya Ganapaadigal ( >father of Brahmasri Sambamoorthy Ganapaadigal > father of Brahmasri T S Balakrishna Sastrigal) Who was then the chief of Veda Paaraayanam at Thiruvidaimarudur Mahalinga Swamy Temple, happen to take a nap under a tree near a huge well after finishing Veda Paaraayanam at the near by Thiruveezhimazhalai Veezhi Naadhar Temple. His hands touched something silky like the feel of a snake. He woke up to find the same as the top of a Siva Linga buried underneath. With the help of farmers nearby he unearthed a full fledged Siva Temple - Siva Lingam, A beautiful Ambal Statue, A unique Vinayaka and a Nandi.
He swiftly searched through the archives for the Sthalapuranam and got this truth unearthed:
Several 100 years ago, a queen by name Badravalli was suffering for Epilepsy, Nervous Problem and Nauseating skin disorder. She went on a penance seeking a cure. Lord Dhakshina moorthy appeared in her dream and prescribed that she must take bath in the Sarva Roha Nivarini Well at Thiruveezhimazhalai, instal a Siva Linga and Ambal at its shores and pray for 48 days.
She dutifully did so and got her ailments remedied magically. She built this temple
around the divine well and Lord Siva and Goddess Parvathy descended here as the incarnation of Badravalleswarar and Badravalli respectively to cure the incurable ailments of man kind.
Our Great Grand Father sprung in to action. Using whatever resource he could muster, he built a beautiful temple. Not to keep Siva as our own property, he handed over the ownership of the temple to the nearby Thiruvaaduthurai Aadheenam who also manage the Veezhinaathar Temple at Thiruveezhimazhalai. To augment resources for its maintenance he also donated his humble land holdings.
Lots of devotees with various nervous and epileptic ailments got cured by divine grace of Badravalli samedha Sri Badravalleeswarar and the holy dip at the divine Well.
But as years rolled by, the focus on the maintenance of this temple got murkier. Ambal Shrine caved in and the statue was accommodated inside the main Siva Shrine. The divine well needed purification and the surroundings were full of shrubs and thorns, unfit for worship.
TSB's earnest attempts to resurrect the temple, based in Chennai and touring through out the country for his Harikatha, did not bear fruits. All that could done was to send money to a local prohit to perform daily pooja and Neivedyam. The shrine was otherwise locked up and not worshiped.
Badravalleeswarar has now chosen to come out of his isolated Thapas and be open to devotees to shower his blessings. Yes, we have recently tumbled on a unique Lady
by name Mahalakshmi who along with her husband has taken the task of refurbishing dilapidated temples in Tamil Nadu as their life time mission through their Organisation know as MAHALAKSHMI CHARITABLE TRUST.
To view their activities pl visit:
This 60 year old couple have resurrected 22 temples so far and work on 45 more are
underway.
By grace of Badravalleswarar, Smt Mahalakshmi has kindly accepted to include our own Badravalleswarar project as their 46th in progress. She has also obtained the necessary permission and blessings from the Aadheenam.
While Smt Mahalaksmi and her husband Sri V C Subramaniyam are blessed by Paramacharyal with enough expertise to carry out such monumental work, a humble request is put forth before every true devotee to contribute to the cost of building this temple, the total of which at this point is estimated by the Sthapathy as Rs 20 Lakhs.
Thiruppani Work will commence on 21st January 2012. A formal invitation in Tamil is attached.
Also find attached herewith the snaps of the temple as it stands today.
Every pie we contribute - every brick that we place to build a SHIVAALAYAM is equivalent to embellishing lives of our generation by thousand folds.
We once again cordially solicit the hearty participation of you all.
Tuesday, September 13, 2011
தெரிந்து கொள்வோம் ... எதை ... எப்படி...
This is the script of my speech at Cancer Alleviation Society of Dr Vijayaraghavan (Patterson Cancer Centre) where 500 students from all over Tamil Nadu were invited for a day long session on various facts about cancer - prevention and cure.
Even experts revisit their basics often to refind themselves. Carnatic Music legends, I have heard that practice SARALI VARISAI and such other BAALA PAATAMS often to keep themselves on the right track. This is one such BAALA PAATAM.
Even experts revisit their basics often to refind themselves. Carnatic Music legends, I have heard that practice SARALI VARISAI and such other BAALA PAATAMS often to keep themselves on the right track. This is one such BAALA PAATAM.
மாணவ மணிகளே, நீங்கள் அனைவரும் ஒரு நல்ல தகவலை தெரிந்து கொள்ள இங்கே கூடியிருக்கிறீர்கள்.
இந்த பருவத்தில் உங்களுடைய அலுவல் என்ன? கற்பது.
பல நல்ல விஷயங்களை கற்பதற்குத்தான் இங்கே வந்திருக்கிரிர்கள்.
உங்களில் யாருக்காவது கிருபானந்தவாரியாரைப் பற்றித் தெரியுமா?
யார் அவர்?... சுழற்பந்து வீச்சாளரா... வேகப்பந்து வீச்சாளரா... யார் அவர்?
ஆம்... அவர் ஒரு சமய சொற்பொழிவாளர்... நன்று.
அவர் பல நல்ல தகவல்களை இசையோடு கொடுக்கக்கூடிய மகான். அவர் கூறுவார்... கற்க - தெரிந்து கொள்ளுங்கள்... எப்படி? கசடற,... அதென்ன கசடற?
இன்று உங்கள் வீட்டில் பண்டிகை... உங்கள் தாயார்... டேய் சோமு... இன்று பண்டிகை... பாயசம் வைக்க வேண்டும்... கடைக்குச் சென்று அதற்கான பொருட்களை வாங்கிட்டு வா என்று கூறுகிறார். நீங்களும் கடைக்குச் செல்கிறீர்கள். "அண்ணே, இன்று எங்கள் வீட்டில் பண்டிகை... பாயசம் வைக்க வேண்டும்... சர்க்கரை, வெல்லம், முந்திரிபருப்பு, திராட்சை கொடுங்க என்பீர்கள்.
இல்லை கடைக்காரரிடம் இப்படி கேட்பீர்களா?... "அண்ணே இன்று எங்கள் வீட்டில் பண்டிகை, பாயசம் வைக்க வேண்டும்... அதற்குத் தேவையான பினாயில், சர்ப் எக்ஸெல், டெட்டால் கொடுங்க..". நிச்சயம் இப்படி கேட்க மாட்டீர்கள் அல்லவா!
எனவே, - கற்க அதாவது பாயசம், கசடற அதாவது சர்க்கரை... பினாயில் இல்லை... நல்ல விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும்... நீங்கள் எல்லோரும் இங்கே வந்திருக்கிறீர்கள்... தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்.
நல்ல விஷயங்களை எப்படி தெரிந்து கொள்ள வேண்டும்.
பொழுதுபோக்கு, உங்கள் எல்லோருக்கும் தெரியும். சினிமா, சீட்டாட்டம், அரட்டை அடிப்பது இப்படி பல... எல்லாமே பொழுதுபோக்கு அம்சங்கள் என்று நினைக்கிறோம். ஆனால், மிகச் சிறந்த பொழுதுபோக்கு எது என்றால், நமது வேலையை சந்தோஷமாகச் செய்வதுதா ன்.
THE BEST FORM OF ENTERTAINMENT IS WORK ENJOYED .
மாணவ மணிகளான உங்களது வேலை என்ன? கற்றல்.
நல்ல விஷயங்களை தெரிந்து கொள்ளுதல். அதை எப்படி கற்றுக்கொள்ள வேண்டுமென்றால்... சந்தோஷமாகவும், மகிழ்ச்கியாகவும் கற்றுக்கொள்ள வேண்டும்.
எப்படி மகிழ்ச்சியாகக் கற்றுக் கொள்வது...
உங்களில் யாருக்காவது லால்குடி ஜெயராமன் அவர்களைத் தெரியுமா?... யார் அவர்? ஹர்பஜன் சிங்கின் சகோதரரா? யார் அவர்?
ஆம், அவர் ஒரு கர்நாடக இசை வயலின் மேதை... அகில உலக மேதை. அவரிடம் வயலின் கற்றுக் கொள்ள உங்களைப்போல் மாணவ மாணவியர் அனைவரும் வருவார்கள். பெண்களாக இருந்தால் இந்நேரம் தோழிகளுடன் chat செய்து கொண்டிருக்கலாமே என்று தோன்றலாம். ஆண்களாக இருந்தால்... என்னடா இது, இன்று ஐபிஎல் மேட்ச் இருக்கிறது... இப்படி வயலின் கற்க வந்திருக்கிறோமே... இப்படி எண்ண அலைகள் ஓடுவது இயல்பு.
கர்நாடக இசையை கற்றுக்கொள்வது என்பதில் ஒரு சின்ன பயம்... எல்லாவற்றையும் மீறி ஆசிரியரோ ஒரு ஜாம்பவான். அனைவரும் ஒருவித கிலியில் அமர்ந்திருப்பார்கள். அவர் வந்தவுடன்... கடுமையான குரலில் "எல்லோரும் வயலினை எடுங்கள்... இந்த ராகத்தில் வாசியுங்கள்" என்றா கூறுவார்...
அவர் ஒரு மாமேதை அல்லவா.
அவர் என்ன செய்வார்... ஒரு பெண்ணைப் பார்த்து...
"மீரா, சமீபத்தில் நீ என்ன திரைப்படம் பார்த்தாய், அப்படத்தில் உனக்கு என்ன பாட்டு பிடிக்கும்"
அந்த மாணவி திகைத்துப் போவாள்... பின் சுதாரித்துக் கொண்டு... "நான் அலைபாயுதே படம் பார்த்தே ன்"...
மேதை பதிலுக்கு : "அதில் வரும் 'சிநேகிதனே' பாட்டு ரொம்ப நல்லாயிருக்கு இல்ல.
அதே பாட்டை அந்த வயலின் மேதை வயலினில் வாசித்துக் காண்பிப்பார். ஒரு கர்நாடக மாமேதை அக்குழந்தைகளின் அளவுக்கு இறங்கி வருவார்.
அதோடில்லாமல் அங்குள்ள அனைவரையும் அந்த பாட்டை வயலினில் வாசிக்கச் சொல்வார். ஒரே நிமிடத்தில் இறுக்கமாக இருந்த அந்த அறையில், மகிழ்ச்சி பொங்கும். இதற்கிடையில் அவர் சொல்லித் தர இருந்த கீர்த்தனையும் அந்தக் கடினமான ராகமும் தாளமும் அவர்களுக்குள் எப்போது சென்றடைந்தது என்று அவர்கள் உணரும் முன் அவற்றை கற்றிருப்பார்கள்.
"HAPPY LEARNING LEADS TO WISDOM . PAINFUL LEARNING BURSTS AS A BUBBLE ". என்று சொல்வது இதற்காகத்தான்.கற்றுக் கொள்வதை மகிழ்சிகரமாகக் கற்றுக் கொள்ளுங்கள்.
கணக்கென்றால் பலருக்கும் கசப்பு. எல்லோரும் வகுப்பறையில் அமர்ந்திருக்கிறீர்கள்... கணக்கு வாத்தியார் ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்கிறார்... ஆனால் உங்கள் காதுகளும், கண்களும் மூடி இருக்கும். அதனால் அந்தக் கணக்கு உங்களைச் சுற்றி சுற்றி சுற்றி வந்து ஒரு ஸ்டேஜில் ஒன்றுமே செய்ய முடியாமல் அப்படியே தவிக்கும்... மணி அடித்தவுடன் எல்லோரும் வீட்டிற்கு சென்று விடுவீர்கள்... அந்தக் கணக்கு என்ன செய்வது என்று அறியாமல் அது பின்பக்கமாகப் போய்விடும்.
கணக்கை காதலிக்க ஆரம்பியுங்கள். உங்களால் கவரப்பட்டு உங்களுடைய காது, கண்கள் வழியாக கணக்கு மூளையில் சென்று பதமாக அமர்ந்துவிடும். பரிட்சை பேப்பரில் 100 மார்க்குகளாக வந்து விழும்.
இன்றைக்கு கேன்சரைப் பற்றி நீங்கள் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள். கேன்சரை பூரணமாக குணமாக்க முடியும் என்பதை இங்கு வந்த அனைத்து cancer ambassadorsகளும் [ அந்த நோய் வந்து பூரண குணம் அடைந்தவர்கள் ] கூறினார்கள் . ஆதலால்... நீங்கள் இதனை மகிழ்ச்சியோடு தெரிந்து கொள்ளுங்கள்... கடமையே என்று தெரிந்து கொள்ளாதீர்கள். அப்பொழுதுதான் அத்தகவல்கள் உங்களுடைய காது, கண்களின் வழியாகப் போய் மூளையில் அழகாக அமர்ந்து கொள்ளும்.
உங்களுக்குள் பல டாக்டர்கள் இருப்பீர்கள்... இன்று நீங்கள் தெரிந்து கொள்ளும் அனைத்துத் தகவல்களையும் பதமாக வைத்துக் கொள்ளுங்கள்....
வீட்டிற்குச் சென்று உங்கள் உற்றார் உறவினர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்... தகவல்கள் என்றுமே அழியாது... ஊசிப்போகாது.
என்றோ ஒரு நாள் உங்களுடைய வாழ்க்கையில் அந்த
" RECALL அந்த DOWNLOAD WILL HELP YOU ".
Monday, March 14, 2011
AMBAKAVAHA
ஜகத்குரு அருளிய அதிசய மந்திரம்!
ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக எனக்குள் ஒரு கேள்வி: ஒன்றேயான கடவுளின் பல வடிவங்களான பல தேவதைகளுக்குத்தான் மூல மந்திரங்கள் உள்ளனவே தவிர, மூலமான ஒரே கடவுளுக்கென அந்த மந்திரமும் இல்லாதிருப்பது ஏன் என்பதே கேள்வி.ப்ரணவம் எனும் ‘ஓம்’ மூலக்கடவுளுக்கே உரித்தான மந்திரந்தான் ஆயினும் வேறு பல மகான்களின் கருத்துக்கு மாறாக, சாஸ்திரக் கருத்தையே மட்டுமே ப்ரணவ ஜபம் செய்யலாம், ஏனையோர் முதலில் ‘ஓம்’ என்று கூறி அதோடு குறிப்பிட்டதொரு தேவதைக்கான மந்திரத்தைச் சொல்லலாமே தவிர, தனியாக ப்ரணவ ஜபம் செய்யலாகாது என்று கூறி வந்துள்ளார்.ப்ரணவம் எனும் ஓம்காரம் நமக்குள் தன்னியல்பாகவே இதயத்தை ஒட்டிய அநாஹத சக்கரத்திலிருந்து எழும் ஒலி; எனவே சிலருக்குத் தன்னியல்பாகவே ‘ஓம்’ என்பது ஒலிக்கும். அவர்கள் மட்டுமே துறவியாய் இல்லாவிடினும் ப்ரணவ ஜபம் செய்யலாம் என்பது ஸ்ரீ பெரியவாளின் கருத்து. இவ்விஷயமாக ஸ்ரீ பெரியவாளையே கேட்டுத் தெளிவு பெறவேண்டும் என்ற எண்ணத்துடன் முப்பத்தேழு ஆண்டுகளுக்கு முன்பு, அப்பொழுது அவர்கள் முகாமிட்டிருந்த தேனம்பாக்கத்துக்குச் சென்றேன். நேரம்: மாலை ஐந்து மணி. முகாமில் இருந்த கிணற்றின் ஒரு புறத்தில் இருந்த குடிலை ஒட்டிய பகுதியிலிருந்து ஸ்ரீபெரியவாள் தரிசனம் தருவார்கள்; கிணற்றின் மறுபுறத்திலிருந்து மக்கள் தரிசனம் பெறுவார்கள்.
அன்றும் அப்படியே நடந்தது. நாங்கள் 40-50 பேர் இருந்தோம். வழக்கம் போல் அதில் பல்வேறு வயதினரும், பல்வேறு சமூகத்தினரும் இருந்தோம். ஓரிரு வெளிநாட்டவரும் இருந்தனர். தரிசனத்தின்போது ஓர் ஐயங்கார் மாது, நேற்றிரவு பெரியவாள் சொப்பனத்தில் வந்து ஏதோ ஒரு மந்திரம் உபதேசித்தீர்கள்; ஆனால் என் துரதிர்ஷ்டம். இன்று காலை அந்த மந்திரம் மறந்து போய்விட்டது! பெரியவாள் அவசியம் அந்த மந்திரத்தை மறுபடி உபதேசிக்க வேணும். எப்பொழுது மடியாக வந்து அந்தரங்கமாக உபதேசம் பெறலாம்?” என மிகவும் ஆதுரத்துடன் வினவினார். அப்பொழுது சாஸ்திரக் காவலரான ஸ்ரீ பெரியவாளா பேசுகிறார் என்று பேராச்சர்யம் அடையுமாறு அவர்கள் கூறிய மறுமொழி: மடியும் வேண்டாம்; அந்தரங்கமும் வேண்டாம்; பகிரங்கமாக எல்லோருக்குமாகச் (அம்மந்திரத்தை) சொல்கிறேன்.” – இப்படிச் சொல்லி கணீரென்ற தெய்வத்தின் குரலில், அம்பகவ”: அம் பகவ”: அம் பகவ”: என மும்முறை உபதேசித்தார்கள். இப்படியும் மந்திரமூர்த்தியே ஆகிய ஸ்ரீமஹாபெரியவாளிடமிருந்துகேளாமலே உபதேசமா என்ற பேருவகையுடன் அங்கு கூடியிருந்த எல்லோரும் ‘அம் பகவ’:மந்திரோபதேசம் பெற்றோம். ஆச்சர்ய உணர்வைத் தொடரும் விதத்தில் அவர்கள் ‘இதை ஜபிக்க எந்த நியமமும் (விதிமுறையும்) இல்லை. எவரும், எந்த நேரமும் ஜபிக்கலாம்’ என்றும் கூறினார்கள். மந்திரத்தின் உச்சரிப்பு: UMBHAGAVAHA (UMBRE LLA என்பதிலுள்ள UM ஒலி) ‘பகவ’ என்பதன் முடிவான ‘வ’: என்பதை ‘வஹ’ என்று கூறவேண்டும். ஒலியியலின்படி ‘வ’ என்பதற்கும் ‘வஹ’ என்பதற்குமிடையே சிறு மாறுபாடு உண்டு. ஆனால் நாம் அதைக் கருத்தில் கொள்ள வேண்டியதில்லை. அன்று ஸ்ரீ பெரியவாளும் ‘வஹு’ என்றே ஸ்பஷ்டமாக மொழிந்தார்கள். ஆகக்கூடி எந்த மந்திர சாஸ்திர நூலிலும் காணப்படாத ‘அம் பகவ’: என்ற மகா மந்திரம் ஸ்ரீ பெரியவாளின் வாய்மொழியில் நமக்கெல்லாம் ஓர் அமுதச்சுனையாகக் கிடைத்துவிட்டது!‘பகவ’: என்பதற்கு ‘பகவானே!’ என்று பொருள். ‘அம்’ என்பது ஒரு மங்கல அக்ஷரம். நெடுங்காலமாக எனக்குள் இருந்த கேள்விக்கான பதிலும் கிடைத்துவிட்டது! அனைத்து தெய்வங்களுமான மூலக் கடவுளுக்குரிய மந்திரம் ‘அம் பகவ!’எந்த தெய்வத்தை இஷ்டமூர்த்தியாகக் கொண்டவரும் இம் மந்திரத்தை அம்மூர்த்திக்குரியதாகக் கருதி ஜபிக்கலாம் என்றும், ‘பகவ;’ என்பது ஆண்பாலில் இருந்தாலும் பெண் தெய்வங்களை ஸ்மரித்தும் இதனை ஜபிக்கலாம் என்றுபெரியவரிடமிருந்து விளக்கம் பெற்றோம்.ஸ்ரீபெரியவாள் தமது நீண்ட நெடிய நூறாண்டு வாழ்வில் அன்று ஒரே ஒருநாள்தான் இப்படியொரு மந்திரத்தை – அதுவும் பஹிரங்கமாக மொழிந்திருக்கிறார்கள் என்பது இன்னொரு பேராச்சர்யம்!எல்லோருக்குமான இத் தங்கப் புதையலை 36 ஆண்டுகள் நான் எனக்குள் மட்டுமே வைத்திருக்கிறேன்! சென்ற ஆண்டிலிருந்துதான் எனக்குத் தெரிந்த மற்ற பலருக்கும் இதனைக் கூறி வருகிறேன். அவர்களில் ஸ்ரீ மகா பெரியவர்களையே இஷ்டதேவதையாகக் கொண்ட சிலர் இம்மந்திர ஜபத்தால் தங்களுக்கு விசேஷ மான பலன் கிடைப்பதாக உவகையுடன் கூறுகிறார்கள்.நன்றி – கல்கி
Subscribe to:
Posts (Atom)







